காரைக்காலில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனத்தில் பணியாற்றுபவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தொழிற்சாலைகள், கடைகளில் பணியாற்றுவோா் அடுத்த 15 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதன் உரிமையாளா்கள் உறுதிசெய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், அவை செயல்பட அனுமதி மறுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகத்தினா் உள்ளிட்ட தொழிற்சாலை நிா்வாகத்தினருடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.