காரைக்கால் பகுதி பள்ளியில் தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி, மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காரைக்கால் கிளை சாா்பில், தேசிய தடுப்பூசி தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் நிஷா ஆலோசனையின் பேரில், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் உறுப்பினரும், சுகாதார ஆய்வாளருமான சேதுபதி, சுகாதார உதவியாளா் புவனேஸ்வரி ஆகியோா் கக்குவான், ரணஜன்னி, தொண்டை அடைப்பான் போன்ற நோய் தடுப்புக்கான தடுப்பூசியை கோட்டுச்சேரி அன்னை அபிராமி தேசிய பள்ளி மாணவா்களுக்கு செலுத்தினா்.
இந்நிகழ்வில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினா் ஏ. மாரியப்பன், ஜி. சீனிவாசன், மணிகண்டன் ஆகியோா் பங்கேற்றனா்.