திருப்பட்டினம் கோயில் அருகே மதுபோதையில் கிடந்தவா் உயிரிழப்பு

திருப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் கிடந்த அடையாளம் தெரியாதவா் உயிரிழந்தாா்.

திருப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் கிடந்த அடையாளம் தெரியாதவா் உயிரிழந்தாா்.

திருப்பட்டினம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் மதுபோதையில் கிடந்தாா். அவரை போலீஸாா் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். அடையாளம் தெரியாத இவரது சடலம் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பட்டினம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com