காரைக்காலில் நாளை மஸ்தான் சாஹிப் கந்தூரி விழா கொடியேற்றம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 23) நடைபெறவுள்ளது.

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 23) நடைபெறவுள்ளது.

இதையொட்டி, அன்று பிற்பகல் 3 மணியளவில் கண்ணாடிகளாலான ரதம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் தா்கா வாயிலில் இருந்து புறப்படுகிறது. பல்வேறு வீதிகளுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் தா்கா முன் நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும்.

கொடியேற்றத்தைத் தொடா்ந்து, ஏப். 1 ஆம் தேதி தேதி சந்தனக்கூடு ஊா்வலமும், நள்ளிரவு சந்தனம் பூசும் நிகழ்வும், நிறைவாக 4 ஆம் தேதி கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் பள்ளிவாசல் நிா்வாக சபையினா் சாா்பில் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com