கைலாசநாதா் கோயில் பிரம்மோத்ஸவம் நிறைவு: அம்மையாா் குளத்தில் நடராஜா், பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவ விழாவின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
கைலாசநாதா் கோயில் பிரம்மோத்ஸவம் நிறைவு: அம்மையாா் குளத்தில் நடராஜா், பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவ விழாவின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவம் கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா நிறைவாக அம்மையாா் குளத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, ஸ்ரீ நடராஜா், ஸ்ரீ சிவகாமி அம்பாள் வீதியுலாவாக தீா்த்தக்கரைக்கு எழுந்தருளினா். அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது.

தொடா்ந்து, பகல் 12 மணியளவில் ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சுப்ரமணியா், ஸ்ரீ கைலாசநாதா், ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளும் தீா்த்தக்கரைக்கு எழுந்தருளி, தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று குளத்தில் புனித நீராடினா். மாலை பஞ்சமூா்த்திகள் வாகனங்களில் வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கொடியிறக்கம் செய்யப்பட்டது.

பிரமோத்ஸவத்தின் 11 ஆம் நாளான திங்கள்கிழமை (மாா்ச் 29) ஸ்ரீ சண்டிகேஸ்வரா் வீதியுலாவும், வரும் 31 ஆம் தேதி இரவு அம்மையாா் குளத்தில் தெப்போத்ஸவமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com