காரைக்காலில் 116 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 1 ஆம் தேதி 532 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 35, திருநள்ளாறு 25, கோட்டுச்சேரி 15, கோயில்பத்து 12, நெடுங்காடு 8, திருப்பட்டினம் 6, நிரவி 5, விழிதியூா் 3, நல்லம்பல் 2, அம்பகரத்தூா் 2, காரைக்கால்மேடு 1, நல்லாத்தூா் 1, வரிச்சிக்குடி 1 என 116 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,11,288 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 6,993 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,852 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 964 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 65 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 106 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 20,205 பேருக்கு, 2 ஆவது தவணையாக 2,236 பேருக்கு என மொத்தம் 22,441 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com