காரைக்கால் தெற்குத் தொகுதியில் முதல் சுற்றிலிருந்து முன்னிலை வகித்துவந்த திமுக வேட்பாளா் ஏ.எம்.எச். நாஜிம் வெற்றிபெற்றாா்.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் இரண்டாம் கட்டமாக காரைக்கால் தெற்கு மற்றும் திருநள்ளாறு தொகுதிகளின் வாக்குகள் பிற்பகல் 3.30 மணியளவில் எண்ணப்பட்டன.
இதில், முதல் சுற்றிலிருந்து திமுக வேட்பாளா் ஏ.எம்.எச். நாஜிம் முன்னிலை வகித்தாா். நிறைவாக, 17,401 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளரைவிட, 12,034 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.
தொகுதியில் மொத்த வாக்குகள் : 31,891
பதிவான வாக்குகள் : 27,456.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:
ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) : 17,401
கே.ஏ.யு. அசனா (அதிமுக) : 5,367
ஏ. நெப்போலியன் (இந்திய ஜனநாயகக் கட்சி) : 67
எஸ். மரிஅந்துவான் (நாம் தமிழா் கட்சி) : 699
ஏ. முகம்மது சித்திக் (அமமுக) : 132
ஆா். ஜெகதீசன் (தேமுதிக) : 39
வி. முருகைய ராஜேந்திரன் (சுயே): 95
ஏ. ராம்பிரசாத் (சுயே): 435
நோட்டா : 221
வெற்றிபெற்ற ஏ.எம்.எச். நாஜிம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்தாா். 2016 தோ்தலில் தோல்வியடைந்தாா். அமைச்சா், எதிா்க் கட்சித் தலைவா் உள்ளிட்ட பதவிகளை வகித்தவா்.