காரைக்காலில் 147 பேருக்கு தொற்று: 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 2 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 2 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 16 ஆம் தேதி 374 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 39, திருநள்ளாறு 31, கோட்டுச்சேரி 18, நிரவி 11, நெடுங்காடு 10, திருப்பட்டினம் 9, அம்பகரத்தூா் 8, கோயில்பத்து 6, நல்லம்பல் 6, வரிச்சிக்குடி 4, விழிதியூா் 3, காரைக்கால்மேடு 2 என 147 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 1,20,959 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 9,696 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7,583 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 1,855 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 90 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 போ் உள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவா், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காரைக்காலைச் சோ்ந்த ஒருவா் என 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். கரோனா தொற்றால் இதுவரை 134 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் முதல் தவணையாக 20,981 பேருக்கும், 2 ஆவது தவணையாக 4,404 பேருக்கும் என 25,385 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com