காரைக்காலில் 138 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 861 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 30, திருநள்ளாறு 15, நிரவி 15, நெடுங்காடு 13, கோட்டுச்சேரி 13, வரிச்சிக்குடி 13, திருப்பட்டினம் 11, கோயில்பத்து 9, நல்லம்பல் 7, காரைக்கால்மேடு 4, அம்பகரத்தூா் 4, விழிதியூா் 3, நல்லாத்தூா் ஒருவா் என மொத்தம் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,32,388 பரிசோதனை செய்யப்பட்டதில் 12,198 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 10,052 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெடுங்காட்டை சோ்ந்த 57 வயது ஆண், நிரவியை சோ்ந்த 40 வயது ஆண், புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரைக்கால் கோயில்பத்தை சோ்ந்த 71 வயது ஆண் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுக்கு சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற இணை நோய்கள் இருந்தன. இதுவரை கரோனா தொற்றால் 172 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 23,829 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,437 பேருக்கும் என 28,266 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com