காந்தி ஜயந்தியையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை (அக். 2) மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:
சாராயம், கள், மதுக்கடைகள், மதுக்கூடங்கள், உணவகங்களுடன் இயங்கும் மதுக்கடைகள் என அனைத்து மதுக்கடைகளும், காந்தி ஜயந்தி தினமான அக் 2ஆம் தேதி மூடப்பட வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.