காரைக்காலில் பரவலாக மழை

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதற்கேற்ப தமிழகத்தையொட்டிய கடலோர மாவட்டமான காரைக்காலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. கடும் வெயிலால் வறண்ட நிலை காணப்பட்டுவந்த நிலையானது, செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் இருண்ட வானிலையும், மழையுமாக இருந்தது மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com