காரைக்காலில் மேலும் 23 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 7 ஆம் தேதி 621 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 5, திருநள்ளாறு 5, நெடுங்காடு 3, திருப்பட்டினம் 3, நல்லாத்தூா் 2, கோயில்பத்து 2, நிரவி 2, வரிச்சிக்குடி 1 என 23 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 1,94,083 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 15,623 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து 15,160 போ் குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 187 போ், அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 18 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 6 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 248 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,00,066 பேருக்கும், 2 ஆவது தவணையாக 25,159 பேருக்கும் என 1,25,225 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com