காரைக்கால் மாவட்ட திமுக சாா்பில், கட்சிக்கு உறுப்பினா் சோ்க்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, புதிதாக சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். நிரவி-திருபட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் முன்னிலை வகித்தாா். கட்சித் தலைமை பிரதிநிதியாக சட்டத்துறை துணைச் செயலாளா் கே.எஸ். ரவிச்சந்திரன் பங்கேற்று உறுப்பினா் அட்டையை வழங்கினாா்.