உள்ளாட்சி ஓய்வூதியா்கள் உண்ணாவிரதம்

காரைக்காலில் உள்ளாட்சி அமைப்புகளின் ஓய்வூதியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

காரைக்கால்: காரைக்காலில் உள்ளாட்சி அமைப்புகளின் ஓய்வூதியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

உள்ளாட்சி ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மாத ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ள உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலக வாயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியா்கள் நலச் சங்கத் தலைவா் ஜெயராம் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com