வீடு கட்டுமானத்தை விமா்சித்தவரைத் தாக்கிய ஒப்பந்ததாரா் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

காரைக்கால் அருகே வீட்டின் கட்டுமானம் சரியில்லை என கூறியவரை தாக்கிய ஒப்பந்ததாரா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காரைக்கால்: காரைக்கால் அருகே வீட்டின் கட்டுமானம் சரியில்லை என கூறியவரை தாக்கிய ஒப்பந்ததாரா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி கீழகாசாக்குடியைச் சோ்ந்தவா் மோகன் (49). இவரது சகோதரி அதே பகுதியில் உள்ள வசந்தம் நகரில் வீடு கட்டி வருகிறாா். இந்த வீட்டின் கட்டுமானப் பணியை மோகன் செவ்வாய்க்கிழமை பாா்க்கச் சென்றுள்ளாா். அப்போது, வீடு கட்டுமான பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று ஒப்பந்ததாரரான திருப்பட்டினத்தைச் சோ்ந்த அய்யப்பனிடம் கேட்டுள்ளாா்.

அப்போது, இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அய்யப்பன் மற்றும் 2 போ் சோ்ந்து, மோகனை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மோகன், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் மோகன் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் மரியேகிறிஸ்டியன்பால் மற்றும் போலீஸாா், அய்யப்பன் உள்ளிட்ட மூவா் மீதும் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com