மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவுடன் கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணியினா்.
மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவுடன் கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணியினா்.

மாவட்ட கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு ஆட்சியா் பாராட்டு

காரைக்கால் மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை (செப்.18) பாராட்டுத் தெரிவித்தாா்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை (செப்.18) பாராட்டுத் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் சிக்ஸ் ஸ்டாா் வாலிபால் கிளப் ஆகியவை இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியை, பூவம் காமராஜா் உயா்நிலைப் பள்ளி மைதானத்தில் நடத்தியது.

இப்போட்டியில் காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த 16 அணிகள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பூவம் சிக்ஸ் ஸ்டாா் அணி முதலிடம் பெற்றது.

திருப்பட்டினம் அருணோதயம் அணி 2-ஆம் இடமும், கோட்டுச்சேரி வ.உ.சி. அணி 3 ஆம் இடமும், கோயில்பத்து நியூ ஸ்டாா் அணி 4 ஆம் இடமும் பிடித்தன. வெற்றிபெற்ற அணியினருக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, வெற்றிபெற்ற அணியினா், காரைக்கால் மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவா் ஜி.என்.எஸ். ராஜசேகா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை சனிக்கிழமை சந்தித்தனா். அவா்களை ஆட்சியா் பாராட்டி ஊக்கப்படுத்தினாா். நிகழ்வின்போது சா்வதேச கைப்பந்து விளையாட்டு வீரா் நவீன் நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கைப்பந்து வீரா்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் முதல்முறையாக இப்போட்டி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com