காரைக்காலில் விநாயகா் சிலைகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்

காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
விநாயகா் சிலைக்கு வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.
விநாயகா் சிலைக்கு வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் காரைக்காலில் தீவிரமடைந்துள்ளன.

இதுகுறித்து காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் சிலை தயாா் செய்யும் மையத்தின் பொறுப்பாளா் என். சிவசுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமை கூறியது :

பல ஆண்டுகளாக விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த 2 ஆண்டுகள் கரோனா பரவல் காரணமாக சிலைகள் தயாரிப்பு முடங்கியது.

நிகழாண்டு 2 முதல் 11 அடி உயரம் வரை பல்வேறு வகையில் வாகனங்களுடன் கூடிய சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. நிகழாண்டு 310 சிலைகள் வெளியூருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

தற்போது சிலைகளுக்கு வா்ணம் பூசும் பணி நடைபெற்றுவருகிறது. ஆக. 26-ஆம் தேதி முதல் சிலைகள் வெளியூா்களுக்கு அனுப்பிவைக்கப்படும். நிகழாண்டு கூடுதலான இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய பலா் சிலைகளுக்கு ஆா்டா் கொடுத்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com