உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசே ஊதியம் வழங்க வலியுறுத்தி, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரசே ஊதியம் வழங்க வலியுறுத்தி, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில், நகராட்சி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டு போராட்டக் குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவ தலைவா் ஜாா்ஜ், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் ஆகியோா் உரையாற்றினா்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை உள்ளாட்சி ஊழியா்களுக்கும் 1.1.2016 முதல் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். பொதுவான பணிநிலை அரசாணையை அமல்படுத்தி, ஒருமுறை நிகழ்வாக அடாக் நிரந்தரம் செய்து, பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்ட நிறைவில் கன்வினா் அய்யப்பன் கூறியது : புதுவை முதல்வா் வாக்குறுதி அளித்தபடி, உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க சட்டம் இயற்ற வலியுறுத்தி வரும் 11-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவையை நோக்கி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே பகுதி உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் ஒருங்கிணைந்த பேரணி நடத்தப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com