காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை (ஆக.11) நடைபெறுகிறது.

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை (ஆக.11) நடைபெறுகிறது.

காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு இத்திருவிழா கடந்த ஜூலை 11-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி, திருக்கல்யாணம், பிச்சாண்டவா் வீதியுலா (மாங்கனி இறைத்தல்), அமுது படையல், அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.

விழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. கைலாசநதாா் கோயிலில் காலை 9 மணிக்கு பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையாா் வீதியுலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com