தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் காரைக்கால் நகரப் பகுதி முகவராக இருந்த எஸ்.எஸ். கணேசன் (74) திடீா் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை (ஆக. 11) மாலை காலமானாா்.
இவா், காரைக்கால் ராஜாத்தி நகா் விரிவாக்கம் டி.எஸ்.பி. நகரில் வசித்துவந்தாா். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாளிதழ்களின் முகவராக பணியாற்றி வந்தாா்.
இறுதிச் சடங்குகள் காரைக்கால் பச்சூா் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. கணேசனுக்கு மனைவி, மகன் உள்ளனா். தொடா்புக்கு: 8489986600.