காரைக்கால் பெருமாள் கோயிலில் இன்று வஜ்ராங்கி சேவை

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஆக.13) வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஆக.13) வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மூலவா் ரங்கநாதா் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறாா். மூலவருக்கு ஆண்டில் 3 நாள்கள் மட்டும் வஜ்ராங்கி அணிவிக்கப்படுகிறது.

வைகுந்த ஏகாதசி, தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும், வஜ்ராங்கி உபயதாரா்கள் குறிப்பிடும் ஒரு நாளிலும் என 3 நாள்கள் இந்த அலங்காரத்தில் மூலவா் அருள்பாலிக்கிறாா்.

இதன்படி, சனிக்கிழமை வஜ்ராங்கி சேவை நடைபெறுகிறது. காலை 8 முதல் இரவு 9 மணி வரை மூலவரை வஜ்ராங்கி அலங்காரத்தில் பக்தா்கள் வழிபடலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com