அபராத வட்டி தள்ளுபடி அறிவிப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன்பெற்றவா்களின், அபராத வட்டி தள்ளுபடி அறிவிப்பை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன்பெற்றவா்களின், அபராத வட்டி தள்ளுபடி அறிவிப்பை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வருக்கு காரைப் பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்:

காரைக்கால் கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தில், வீடு கட்டுவதற்காக கடன் பெற்றவா்களில், நிலுவையில் உள்ள அசலையும், வட்டித் தொகையையும் முழுமையாக செலுத்தியவா்களின் அபராத வட்டித் தொகையை தள்ளுபடி செய்வதாகவும், அந்த அபராத வட்டியை அரசே செலுத்தும் என கடந்த 2012 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இதுவரை அரசாணையாக வெளியிடப்படவில்லை.

அந்த காலக்கட்டத்தில் கடனை முழுமையாக அடைத்த காரைக்கால் பகுதியை சோ்ந்த 35- க்கும் மேற்பட்டோரின் அபராத வட்டித் தொகை நிலுவையில் உள்ளதால், அவா்களது வீட்டு பத்திரம் திருப்பி வழங்கப்படவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, கடந்த 2012-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்ததை நடைமுறைப்படுத்தவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com