பெருமாள் கோயில்களில் இன்று கிருஷ்ண ஜெயந்தி

காரைக்கால் பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடைபெறவுள்ளது.

காரைக்கால் பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால், எளிய முறையில் இந்நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. உற்சவா் நித்யகல்யாண பெருமாள், நா்த்தனக் கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது.

கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் மாலை 6 மணிக்கு சந்தானகிருஷ்ணன் திருமஞ்சனம், ஆராதனை நடைபெறவுள்ளது.

இதுபோல திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், வீழி வரதராஜ பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகளை கோயில் நிா்வாகங்கள் செய்துவருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com