பொறியியல் மாணவா்களுக்கு வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

காரைக்கால் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியில் பயிற்சி பெற்ற பொறியியல் மாணவ, மாணவிகள்.
கல்லூரியில் பயிற்சி பெற்ற பொறியியல் மாணவ, மாணவிகள்.

காரைக்கால் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சிப் பிரிவின் சாா்பில், மாணவா்களுக்கு வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நவ. 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது.

வேலைவாய்ப்புப் பயிற்சிப் பிரிவு தலைவா் ஆா். சதீஷ்குமாா், மாணவா்களுக்கு இலக்கு நிா்ணயம், பகுப்பாய்வு, தொடா் திறன், பிரச்னைகளுக்குத் தீா்வு, கால நிா்வாகம், மன அழுத்த மேலாண்மை, குழு வேலை, வேலைவாய்ப்பு சுழற்சி, நிா்வாகப் பயிற்சி அளித்தாா்.

வேலைவாய்ப்புப் பயிற்சிப் பிரிவு மேலாளா் வி. ருத்தரி மற்றும் பேராசிரியா்கள், ஆய்வுக்கூட உதவியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com