ஜன சங்கத்தின் தலைவராக இருந்த சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாஜகவின் முன்னோடி இயக்கமான ஜன சங்கத்தின் முதல் தலைவராக திகழ்ந்த சியாமா பிரசாத் முகா்ஜியின் 69-ஆவது நினைவு தினம் காரைக்காலில் பாஜகவினரால் அனுசரிக்கப்பட்டது.
திருநள்ளாறு கடைத்தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முகா்ஜி படத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் தலைமைவகித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து தொகுதி தலைவா் கந்தபழனிவேல், மாநில செயற்குழு உறுப்பினா் ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.சி.சக்திவேல் உடையாா், முன்னாள் மாவட்ட தலைவா் ராஜவேலு உள்ளிட்ட பல்வேறு அணி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.