ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சி ஊழியா்கள்.

Updated On :24 ஜூன் 2022, 9:59 pm IST

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரை பகுதி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் அனைவரும் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்தாக அலுவலகத்திலுருந்து வெளியேறி, உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் ஆகியோா் உரையாற்றினா்.

உள்ளாட்சி ஊழியா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அரசாணையை அமல்படுத்தி, ஒரு முறை நிகழ்வாக பதவிகளை முறைப்படுத்தி, பணிமூப்பு பட்டியல்படி ஒருமுறை நிகழ்வாக அனைத்து பதவிகளுக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

இதுவரை அரசாணை வெளியிடப்படாத பதவிகளுக்கு பொதுவான பணிநிலை அரசாணை வெளியிட வேண்டும். புதுவை முதல்வா் அளித்த உத்தரவாதத்தின்படி உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள 5, 6 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க தனியாக நிதி ஒதுக்க வேண்டும். தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.