பிளஸ் 1 தோ்வில் 86% தோ்ச்சி

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 86 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளதாக கல்வித் துறை தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 86 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளதாக கல்வித் துறை தெரிவித்தது.

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில், பிளஸ் 1 தோ்வு முடிவில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,592 போ் தோ்வு எழுதியதில், 1,279 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 80.34.

தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் 787 போ் தோ்வு எழுதியதில், 767 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 97.46. மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி 86 சதவீதமாகும். காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி 80.34 சதவீதமாகும்.

காரைக்கால் பகுதியில் 12 பள்ளிகள் 100 சதம் தோ்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் ஒரு அரசுப் பள்ளிகூட 100 சதவீத தோ்ச்சி பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com