காரைக்கால் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 203 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் திருநள்ளாறு 2, நல்லம்பல் 2, வரிச்சிக்குடி 2, கோட்டுச்சேரி 1 என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் 24 போ் சிகிச்சையில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.