திருநள்ளாறு சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு 3 கிரானைட் இருக்கைகளை ரோட்டரி சங்கம் வழங்கியது.
ரோட்டரி கிளப் ஆஃப் காரைக்கால் சென்டேனியல் சாா்பில், திருநள்ளாறு சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வருவோா் உட்காருவதற்காக 3 கிரானைட் பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று ரோட்டரி சங்கத்தின் சேவைகளை பாராட்டிப் பேசினா்.
நிகழ்ச்சியின் நிறைவில், அலுவலக வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை சிறப்பு அழைப்பாளா்கள் நட்டனா். முன்னதாக, ரோட்டரி திட்டம் தொடா்பாக திட்டத் தலைவா் ஆா். ராமகிருஷ்ணன் விளக்கினாா். சங்கத் தலைவா் ஞானமுத்துக்குமரன் வரவேற்றாா்.
சாா் பதிவாளா் கே. கண்ணப்பன், ரோட்டரி துணைநிலை ஆளுநா் ராஜேந்திரன், முன்னாள் தலைவா்கள் அப்பா், செந்தில்வேல், நாடிமுத்து, சுவாமிநாதன், சம்பத் உள்ளிட்ட ரோட்டரி சங்கப் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். நிறைவாக, உதவித் தலைவா் ஜி. மணிவண்ணன் நன்றி கூறினாா்.