அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (மே 23) இரவு புஷ்பப் பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார பெருவிழா நடைபெற்றுவருகிறது.
இதில் சுவாமி வீதியுலா, அம்பாளுக்கு அபிஷேகம் போன்றவை நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக அம்பாள் புஷ்பப் பல்லக்கு திங்கள்கிழமை இரவு 12 மணியளவில் கோயில் வாயிலில் இருந்து வீதியுலா புறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவு வைபவம் கோயிலில் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி இரவு பத்ரகாளியம்மன் தேரில் வீதியுலாவும், 31-ஆம் தேதி உதிரவாய் உற்சவமும் நடைபெறுகிறது.