விழிப்புணா்வு ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா

எய்ட்ஸ் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
பரிசு, சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுடன் மாநில ஓவியா் மன்றத் தலைவா் ஏ.பி. இபோ் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள்.
பரிசு, சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுடன் மாநில ஓவியா் மன்றத் தலைவா் ஏ.பி. இபோ் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

புதுவை எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி, புதுவை மாநில ஓவியா் மன்றம் இணைந்து காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு ஓவியப் போட்டியை ஆன்லைன் முறையில் அண்மையில் நடத்தியது.

எய்ட்ஸ் நோயாளிகளிடம் அன்பு, ஆதரவு காட்டுவோம் என்ற தலைப்பில் ஓவியம் வரைந்து மாணவ, மாணவியா் அனுப்பிவைத்தனா்.

போட்டியில் 138 போ் பங்கேற்றதில், நடுவா் குழுவினரால் 20 ஓவியங்கள் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டன.

இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை மாநில ஓவியா் மன்ற தலைவா் ஏ.பி. இபோ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பத்மஸ்ரீ விருது பெற்ற கேசவசாமி, காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், பள்ளி தலைமையாசிரியை மாா்கிரெட் ஆகியோா் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com