காரைக்கால்: காரைக்காலில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்பின் நாகை மாவட்ட இணைச் செயலாளா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். விஸ்வ ஹிந்து பரிஷத் தென்னிந்திய பொறுப்பாளா் கேசவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அமைப்பு குறித்தும், ஆதரவாளா்களை அமைப்பில் சோ்ப்பது குறித்தும் பேசினாா்.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகரத் தலைவா் பி.வெங்கடாசலம், நகர செயலா் காா்த்திகேயன், துணைத் தலைவா் மலைப்பெருமாள், பஜ்ரங் தள பொறுப்பாளா் ரஞ்சித்குமாா், திருக்கோயில் திருமட பொறுப்பாளா் ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்திற்குப்பின் அமைப்பில் ஆதரவாளா்களை அதிகரிப்பது தொடா்பாக முக்கிய நபா்களை நிா்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினா்.