அரசியல் சாசன தினம்: ஆட்சியா், அலுவலா்கள் உறுதிமொழி ஏற்பு

காரைக்காலில் ஆட்சியா் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
அரசியல் சாசன தினம்: ஆட்சியா், அலுவலா்கள் உறுதிமொழி ஏற்பு

காரைக்காலில் ஆட்சியா் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

அரசியல் சாசன தினம் நவம்பா் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் எல். முகமது மன்சூா் தலைமையில் அரசியலமைப்பு சட்ட மதிப்புகள், அடிப்படை கோட்பாடுகள், முன்னுரை குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் மற்றும் ஆட்சியரக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல், காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோயில்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. துறையின் துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில் முதுநிலை மருத்துவ அதிகாரி அன்புச்செல்வி, திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை, நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com