காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 172 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் நெடுங்காடு 4, நல்லாத்தூா் 2, திருப்பட்டினம் 2, அம்பகரத்தூா், காரைக்கால்மேடு, நல்லம்பல் தலா 1 என தொற்று உறுதியானது.
இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் 43 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.