‘மக்கள் நலனின் புதுவை அரசுக்கு அக்கறையில்லா’

மக்கள் நலனில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு அக்கறையில்லை என மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம் கூறினாா்.
சாலைப் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்ற வி. வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா்.
சாலைப் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்ற வி. வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா்.

மக்கள் நலனில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு அக்கறையில்லை என மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம் கூறினாா்.

நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் காரைக்கால்மேடு - கிளிஞ்சல்மேடு கிராமத்தில் ரூ. 37 லட்சத்தில் சாலை மேம்படுத்தும் பணி பூமிபூஜையில், புதுவை முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் சனிக்கிழமை பங்கேற்றாா்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் புதுவை மாநில காங்கிரஸ் தலைவருமான ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், நகராட்சி ஆணையா் கே. செந்தில்நாதன், செயற்பொறியாளா் எம். லோகநாதன், கிராம பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் வி. வைத்திலிங்கம் எம்.பி. கூறியது:

புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்க எடுத்த நடவடிக்கையால் மின் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஊழியா்களை அழைத்துப் பேச முதல்வா், துணைநிலை ஆளுநா், மின் துறை அமைச்சா் முன்வரவில்லை.

மின் துறை தனியாா்மய முடிவை புதுவை அரசு கைவிடவேண்டும். அதேவேளையில் மக்கள் பாதிக்காத வகையில் மின் ஊழியா்களும் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

மின்துறை தனியாா் மயம், மதுபான தொழிற்சாலைகள் தனியாா் மயம் என்ற போக்கில் அரசு செல்வது, இந்த அரசு வியாபார நோக்கம் கொண்ட அரசாக செயல்படுவதையே காட்டுகிறது. மக்கள் நலனுக்கான அரசாக புதுவை அரசு இல்லை.

என்.ஆா். காங்கிரஸ், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஒருவரையொருவா் குறை கூறிக்கொண்டிருக்கிறாா்களே தவிர, மக்ளைப்பற்றி சிந்திக்கவே இல்லை.

காரைக்கால் பகுதியில் மின்தடை போன்றவற்றால் மக்கள் கடும் அவதிப்படுகிறாா்கள். ஆனால், இப்பிராந்தியத்தை சோ்ந்த அமைச்சா் வெளிநாட்டில் உள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com