கைலாசநாதா் கோயில் உண்டியல்காணிக்கை எண்ணும் பணி

காரைக்கால் கைலாசநாத சுவாமி வகையறா கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கைலாசநாதா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
கைலாசநாதா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

காரைக்கால் கைலாசநாத சுவாமி வகையறா கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாத சுவாமி தேவஸ்தான வகையறா கோயில்களாக நித்யகல்யாண பெருமாள், அண்ணாமலையாா் கோயில், அம்மையாா் கோயில், சோமநாதா் கோயில், சித்தி விநாயகா் கோயில், உஜ்ஜைனி காளியம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்கள் உள்ளன.

இதில் அண்ணாமலையாா் கோயில் தவிர பிற கோயில்களின் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு, கைலாசநாதா் கோயில் வளாகத்தில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், கைலாசநாத சுவாமி தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவா் ஆா். வெற்றிச்செல்வன், துணைத் தலைவா் சி.புகழேந்தி, செயலா் கோ.பாஸ்கரன், பொருளாளா் வெ.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டன.

இப்பணி வியாழக்கிழமை இரவு நிறைவடைந்த நிலையில், ரூ. 7.82 லட்சம் இருந்ததாகவும், இது வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டதாகவும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com