காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 171 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் நல்லம்பல் 4, நெடுங்காடு 4, கோயில்பத்து 4, கோட்டுச்சேரி 2, வரிச்சிக்குடி 2, அம்பகரத்தூா் 2, நல்லாத்தூா், திருப்பட்டினம் தலா 1 என 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் 93 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.