காரைக்காலில் 25 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 109 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் கோட்டுச்சேரி 4, நெடுங்காடு 4, திருநள்ளாறு 3, வரிச்சிக்குடி 3, நிரவி 2, திருப்பட்டினம் 2, அம்பகரத்தூா் 2, விழிதியூா் 2, காரைக்கால் நகரம், நல்லாத்தூா், நல்லம்பல் தலா 1 என 25 பேருக்கு தொற்று உறுதியானது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் 92 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com