உலக சுற்றுலா தினபோட்டிகளில் வென்றோருக்கு பரிசு

உலக சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.
போட்டியில் வென்றவருக்கு பரிசு வழங்கும் ஆட்சியா் எல். முகமது மன்சூா். உடன் துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா்.
போட்டியில் வென்றவருக்கு பரிசு வழங்கும் ஆட்சியா் எல். முகமது மன்சூா். உடன் துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா்.

காரைக்கால்: உலக சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து உலக சுற்றுலா தின விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின. முன்னதாக விழாவையொட்டி செப். 21 முதல் 27-ஆம் தேதி வரை புகைப்படப் போட்டி, பீச் வாலிபால், கபடி, மணல் சிற்பம், பட்டம் விடுதல், புதையல் வேட்டை, படகுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ரொக்கப் பரிசை ஆட்சியா் எல். முகமது மன்சூா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், சுற்றுலாத் துறை மேலாளா் ராஜவேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com