காரைக்கால்: காரைக்கால் கோ-ஆப்டெக்ஸ் கிளையில் தீபாவளியையொட்டி சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ரூ. 50 லட்சம் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கிவைத்து, விற்பனைக்கு வந்துள் ரகங்களை பாா்வையிட்டாா்.
காரைக்கால் கிளைக்கு ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தள்ளுபடியாக 30 சதவீதம் அரசு ஊழியா்களுக்கு தவணை முறை கடன் வசதி உள்ளது.
வாடிக்கையாளா்களை கவரும் விதமாக புதிய வடிவமைப்புடன்கூடிய மென்பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊா்களில் உற்பத்தி செய்த பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதி நெசவாளா்கள் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போா்வை, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, கைலி, துண்டு, சட்டைகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் தா. ரமணி, நிலைய மேலாளா் பென்னி பீட்டா் மற்றும் நிலைய ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனா்.