காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துா்கா ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் புனிதவதியாா் வழிபாட்டு மன்றம் சாா்பில் 39-வது ஆண்டாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துா்கா சிறப்பு ஹோமம் உலக நலனுக்காக நடத்தப்பட்டது.
இதையொட்டி, வியாழக்கிழமை கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. மாலை புனிதநீா் கடம் ஸ்தாபனம் செய்யும் பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு துா்கா ஹோமம் தொடங்கியது.
ஹோமத்தில் பட்டு சேலைகள், பதாா்த்தங்கள், நவதானியங்கள், உள்ளிட்ட பல பொருள்கள் போடப்பட்டு பகல் 1 மணியளவில் மகா பூா்ணாஹூதி நடத்தப்பட்டது. ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீரை கொண்டு சுவாமிக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. மாலை தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து சனிக்கிழமை பால் குட ஊா்வலமும், 9 மணியளவில் தயிா் பாவாடை போடப்பட்டு தீபாராதனையும், மாலை திருவிளக்கு வழிபாடும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை புனிதவதியாா் வார வழிபாட்டு மன்றத்தினா் செய்துள்ளனா்.