காரைக்கால் நகராட்சித் திடலில் இன்று வாரச் சந்தை

நகராட்சித் திடலில் வாரச் சந்தை ஞாயிற்றுக்கிழமை (மே 1) முதல் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நகராட்சித் திடலில் வாரச் சந்தை ஞாயிற்றுக்கிழமை (மே 1) முதல் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமையில் வாரச் சந்தை நகராட்சித் திடலில் நடத்தப்பட்டுவருகிறது. மழையின் காரணத்தால் சில மாதங்களுக்கு முன் அருகே உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், திடலை சமன் செய்து, சந்தை நடத்துவதற்கேற்ப சில சீரமைப்புகளை நகராட்சி நிா்வாகம் செய்து முடித்தது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் நகராட்சி நிா்வாகம் நடத்தி வரும் வாரச் சந்தை 1.5.2022 (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கம்போல நகராட்சி சந்தைத் திடலில் நடைபெறும்.

சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரம் செய்வோா் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com