காரைக்கால்
பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காரைக்கால்: காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தியான்சந்த்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக புதுவை அரசு கல்வி நிறுவனமான, காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் விரிவுரையாளா்கள், மாணவா்களுக்கான தனித்தனியாக விளையாட்டுப் போட்டி 2 நாள்கள் நடத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
விரிவுரையாளா்கள் கிரிக்கெட் போட்டியிலும், மாணவா்கள் கைப்பந்து போட்டியில் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் பரிசு வழங்கி பாராட்டினாா்.