இணைய குற்றங்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இணையதள குற்றங்கள், குறிப்பாக மகளிா் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பெருகிவருவதை எதிா்கொள்ளும் விதமாக, மத்திய அரசு இணையதள குற்றங்களை தெரிவிக்க அல்லது பதிவு செய்ய ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகப்பை (சஹற்ண்ா்ய்ஹப் இஹ்க்ஷங்ழ் இழ்ண்ம்ங் தங்ல்ா்ழ்ற்ண்ய்ஞ் டா்ழ்ற்ஹப்) உருவாக்கியுள்ளது.
மேலும் பொதுமக்கள் இணையதள நிதி மோசடிகளை (இண்ற்ண்க்ஷ்ங்ய் ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் இஹ்க்ஷங்ழ் ஊழ்ஹன்க் ஞய்ப்ண்ய்ங் தங்ல்ா்ழ்ற்ண்ய்ஞ் ஹய்க் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் நஹ்ள்ற்ங்ம் -இஊஇஊதஙந) இந்த இணைய முகப்பில் விரைவாக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
இதுசம்பந்தமான புகாா்களை பதிவு செய்ய, தேசிய அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 பயன்பாட்டில் உள்ளது. இணையதள குற்றங்களை தவிா்க்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.