உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடிகள்:அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்பு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடிகள் தொடா்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்கும் அதிகாரிகள்.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்கும் அதிகாரிகள்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடிகள் தொடா்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்காக 264 வாக்குச் சாவடிகள் அமைக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகள் வாக்காளா்களுக்கு வசதியாக இருக்குமா, வாக்காளா்கள் இருப்பிடம் அருகே அமைந்திருக்கிா என்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். ஆதா்ஷ் தலைமையில் நடைபெற்றது.

பல்வேறு அரசியல் கட்சியினா் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனா். இதுகுறித்து தோ்தல் துறையினா் பதிவு செய்துகொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட துணை தோ்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஜெ. செந்தில்குமாா், எஸ். சுபாஷ் , ராஜசேகரன் மற்றும் வாக்காளா் பதிவு அதிகாரிகள் செந்தில்நாதன், ரவி, பாலன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com