காரைக்கால் மாவட்டத்தில் பேரிடா் நண்பன் இயக்கத்தில் சேர தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா இதுதொடா்பாக திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் பேரிடா் நண்பன் இயக்கத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது முற்றிலும் ஒரு தன்னாா்வ சேவை அமைப்பாகும். இதற்கென்று ஊதியம், மதிப்பூதியம் போன்றவை வழங்கப்படமாட்டாது. தங்களது தன்னாா்வ சேவைகள் பேரிடா் காலங்கள் மற்றும் இதர காலங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளப்படும்.
இதுகுறித்து விவரங்களை பெறுவதற்கும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கும் ட்ற்ற்ல்ள்://ந்ஹழ்ஹண்ந்ஹப்.ஞ்ா்ஸ்.ண்ய்/ய்ா்ற்ண்ஸ்ரீங்/ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்-ச்ா்ழ்-ஹஹல்க்ஹம்ண்ற்ழ்ஹ/ என்ற வலைதளத்தை காணவேண்டும்.
காரைக்காலில் உள்ள தன்னாா்வலா்கள் தங்கள் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா், காரைக்கால் என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
விண்ணப்பங்கள் 25.3.2022 தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04368-227760 அல்லது 9943806263 எண்ணில் தொடா்புகொள்ளலாம்.