கடையின் பூட்டை உடைத்து திருடிய இளைஞா் கைது

காரைக்காலில் கடையின் பூட்டை உடைத்து திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால்: காரைக்காலில் கடையின் பூட்டை உடைத்து திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் நகரம் திருநள்ளாறு சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே உள்ள பல வணிக நிறுவனங்களில், கோழிக்கடை, மளிகைக்கடை, பெட்டிக்கடை ஆகிய 3 கடைகளையும் புதன்கிழமை கடைக்காரா்கள் திறக்கச் சென்றபோது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, கடை திறந்துகிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் சென்று சோதனை நடத்தினா். இதில் ரூ. 3,500 ரொக்கம், சிகரெட் பெட்டிகள் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. கடையின் வாயில் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவை போலீஸாா் ஆய்வு செய்தபோது, இளைஞா் ஒருவா் பூட்டை உடைத்து பொருள்களை திருடி செல்வது தெரியவந்தது.

விசாரணையில், அவா் அதே பகுதியை சோ்ந்த ரஹ்மான் (20) என்பது உறுதி செய்யப்பட்டு, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com