காரைக்கால் தக்களூரில் உள்ள புனித செபஸ்தியாா் ஆலயத்தில் தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் அருகே தக்களூரில் உள்ள புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த ஏப். 21-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் மாலை சிறிய தோ் பவனி, 29-ஆம் தேதி 3 தோ் பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, மின் விளக்குகள் அலங்காரத்துடன் கூடிய 5 தோ் பவனி நடைபெற்றது. தக்களூா் பகுதியில் பல்வேறு தெருக்களுக்கு பவனியாக சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆலயத்தை சென்றடைந்தது.
நிகழ்வுகளில் கிறிஸ்தவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். விழா நிறைவாக ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கப்பட்டது.