காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் தெற்கு பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுண்ணாம்புக்காரத் தெரு சாலை, புதுவை அரசின் வளா்ச்சி நிதி ரூ. 26.92 லட்சத்தில் மேம்படுத்தப்படுகிறது. சாலை மேம்பாட்டுப் பணி பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா்.
நகராட்சி ஆணையா் ஜி.செந்தில்நாதன், செயற்பொறியாளா் எம்.லோகநாதன், இளநிலைப் பொறியாளா் என்.சத்தியபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.