காரைக்கால் அருகே மோட்டாா் சைக்கிள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் மதகடி பகுதியைச் சோ்ந்த முரளி (38), தான் வசிக்கும் வீட்டு வாயிலில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் மோட்டாா் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாா். வியாழக்கிழமை காலை வெளியே வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிளை காணவில்லை.
விழிதியூா் சாலையில் உள்ள சாராயக்கடை பகுதியில் 2 போ் அவரது மோட்டாா் சைக்கிளை வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் நிரவி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள், சென்னையைச் சோ்ந்த முருகவேல் (34), குடவாசல் பகுதியை சோ்ந்த பாண்டியன் (70) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, மோட்டாா் சைக்கிளை மீட்டனா்.